The fast pace of the modern world may put our mind in chaotic state. Information comes and goes, we must do this and do that. There are simply too many things that reside in our mind.
While it may cause stress or even depression, at the very least it puts us away from a peaceful state of mind. But a peaceful mind is essential for our effectiveness. It keeps us calm no matter how the situation is, and it allows us to stay joyful during the day. At the end of the day, it makes us happier and more productive.
So here Mind like waterI’d like to share 11 ways to have a “mind like water”, a state of mind so peaceful that it’s like a calm water. Pick the ones that work for you:
1. Reduce your use of rational thinking
We need rational thinking, but we tend to overuse it in analyzing our situations and making decisions. That brings a lot of things into our mind which potentially also brings in noise. Is rational thinking really that important? I don’t think so. Even Einstein once said that “I never came upon any of my discoveries through the process of rational thinking.”
2. Listen to your intuition
While you should reduce your use of rational thinking, you should increase your use of intuition. Listen to your intuition whenever you need to make decisions. Your intuition often knows more than you think. Furthermore, since intuition works instantly, it won’t bring a lot of things into your mind. Your mind will remain calm and peaceful. No wonder Einstein said that “The only real valuable thing is intuition.”
3. Listen to your heart
Your heart tells you what is right to do. There is where your deepest value and principles reside. Following what your heart says helps you be true to yourself, and that has a great effect on giving you peace of mind. So learn to listen more to your heart, and do what it tells you to do.
4. Get the stuff out of your mind
This is a basic principle of Getting Things Done (GTD). In fact, the term “mind like water” comes from GTD. You should record the things you need to do or remember on an external system you trust so that they do not occupy your mind. This way your mind will be freed to focus on your current task.
5. Meditate
Meditation is one of the best ways to calm your mind and have a “mind like water”. Even if you do the other ways mentioned in this post, sometimes there is still noise left in your mind. Meditation is a good way to purify it. There are many forms of meditation to choose from.
6. Limit your information intake
Consuming more information often means introducing more noise into your mind. That’s why limiting your information intake is essential to have a calm and peaceful mind. The rule of thumb in consuming information is this: consume information no more than what is necessary. But how do you know what is necessary? Rational thinking may help you figure it out, but I believe that your heart and intuition can help you just as much – if not more.
7. Read spiritual texts
Spiritual texts are among the purest kinds of information you can possibly get. It helps you link together your mind, heart, and intuition. While generally you should limit your information intake, I believe that you can safely consume spiritual texts without introducing noise into your mind.
8. Eliminate unessential stuff
It will be easier to have a peaceful mind if you don’t have too much stuff to worry about. So always look for ways to simplify your life. Eliminate the things which are not essential so that you can focus on the essential. Elimination should be a constant part of your life.
9. Don’t think too much about yourself
We usually think about our own needs and problems most of the time. But self-centered thoughts rarely bring peace into our mind. Quite the opposite, it may make us feel stressed and frustrated. So don’t think too much about yourself; forget yourself for a while.
10. Do something for others
Instead of thinking too much of ourselves, we should think more of others. Think of what you can do for others and do it. There is joy in giving which will give you peace of mind.
11. Slow down
In whatever you do, you do not need to be in rush. Doing so may only bring you faster to the wrong direction. First of all, you need to know where is the right direction to go. Slow down so that you can clearly hear the voice of your heart and intuition.
Courtesy: http://www.lifeoptimizer.org
Saturday, June 26, 2010
Tuesday, March 9, 2010
ஆயுர்வேதம்: இளமை...இதோ! இதோ!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளமை...இதோ! இதோ!
திருமணமான என் அண்ணனுடன் எனக்குப் பெண் பார்க்கச் சென்றேன். அண்ணனை மாப்பிள்ளை என நினைத்து உபசரிக்கத் தொடங்கிவிட்டார்கள். காரணம், எனக்கு 30 வயதுதான் ஆகிறது என்றாலும், தலைமுடி, மீசையில் நரை எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. இளமையிலேயே முதுமை வரத் தொடங்கிவிட்ட எனக்கு, மறுபடியும் இளமையுடன் அழகாக மாற வழி என்ன?
கனகவேல், தூத்துக்குடி.
இன்றைய வாழ்க்கைமுறையில் இளைஞர்களுக்கு ஓர் ஆண்டில் இரு வயது கூடுகிறது. தான் படித்த கல்விக்கு ஏற்றவாறு வேலை அமையாமற் போனாலோ, தன் கூடப் படித்தவர்கள் தன்னைவிட வாழ்க்கையில் நல்லமுறையில் வேலை கிடைத்துப் பணியில் அமர்ந்துவிட்டாலோ ஏற்படும் மனப் புழுக்கம், முதுமைக்கு விரைவில் வித்திடுகிறது. மனதில் ஏற்படும் இந்த தாபம், உடற்சூட்டை அதிகரித்து தோலைச் சார்ந்த ப்ராஜகம் என்னும் பித்தத்தைச் சூடாக்குகிறது. நெல் விளையும் செடியின் வேர் பதிந்துள்ள நிலத்தில், நீர் குறைந்து உரம் கூடி, வெயிலின் தாக்கமும் அதிகரித்தால், செடி பழுத்து விடுவதைப் போல, மயிர்க்கால்கள் பதிந்துள்ள தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, ப்ராஜக பித்தத்தின் சூடும் கூடும்போது, மயிர்க்கால்களின் வழியாக, நுனிவரை முடி நரைத்து விடுகிறது. ஆக, தேக ஆரோக்கியத்தின் பாதுகாப்பானது மனதிலிருந்து தொடங்குகிறது.
என்றும் இளமையுடன் அழகாக இருக்க விரும்பும் நீங்கள் ஆயுர்வேதம் உபதேசிக்கும் அனுதைலம் எனும் மூக்கில் விட்டுக் கொள்ளும் மருந்தை இரண்டு சொட்டு காலை, இரவு பல் தேய்த்த பிறகு விட்டுக் கொள்ளவும். மூக்கில் விட்டவுடன் தலைப் பகுதியில் சேர்ந்துள்ள தேவையற்ற கபதோஷத்தையும், மேலும் பல அழுக்குகளையும் கரைத்து, வாய்ப் பகுதிக்கு வந்தவுடன் காரி உமிழ்ந்துவிடவும்.
கண்களுக்கு இளநீர் குழம்பு இரண்டு சொட்டு இரவில் படுக்கும் முன் விட்டுக் கொள்வதால், நாள் முழுவதும் கண்ணில் சேர்ந்துள்ள தூசும் மாசும் கண்ணிலிருந்து நீராக வடிவதன் மூலம் வெளியேறிவிடும். இந்த அனுதைலமும், இளநீர்க் குழம்பும் விட்டவுடன் எரிச்சலைத் தந்தாலும், சிறிது நேரத்திற்குப் பிறகு குளிர்ச்சியைத் தருகின்றன. அரிமேதஸ் தைலம், சிறிது வாயிலிட்டு உமிழ்நீர் சுரந்தவுடன் வாயினுள் குலுக்கித் துப்பிவிட, வாயிலுள்ள பகுதி முழுவதும் சுத்தமடைவதன் விளைவாக, உணவைச் செரிமானம் செய்வதற்கான சுரப்பிகளின் வழியாக வரும் திரவங்கள் சுத்தமாகச் சுரக்கின்றன. நீங்கள் உண்ணும் உணவின் சத்தை, உடல் பெறுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் எளிதில் பெறலாம்.
தலைக்கு நீலிபிருங்காதிகேர (தேங்காய் எண்ணெய்) தைலத்தையோ, கய்யுண்யாதி கேர தைலத்தையோ, பஞ்சில் முக்கி தலையில் சுமார் 1 மணி நேரம் ஊறிய பின்பு குளிக்கவும். இதனால், தலைபாரம் சளி ஜலதோஷம் ஏற்படாமலிருக்க, ராஸ்னாதி சூரணத்தைக் குளித்தபிறகு உச்சந்தலையில் தேய்த்துவிடவும்.
நீங்கள் ஆணாக இருப்பதால் திங்கள் - புதன் - சனிக்கிழமைகளில் உடலுக்குப் பலாஅஸ்வகந்தாதி குழம்பு, பிரபஞ்சன விமர்தனம் குழம்பு போன்ற தைலங்களில் ஒன்றை உடலெங்கும் தேய்த்து சுமார் 1 மணி நேரம் வரை ஊறிக் குளிக்கவும்.
இருமாதங்களுக்கு ஒரு முறை அவிபத்தி சூரணத்தை 7 முதல் 10 கிராம் வரை எடுத்து, 12 முதல் 15 மி.லி.வரை தேன் குழைத்து, காலையில் குடித்த கஞ்சி செரித்து பசி எடுத்தவுடன் நக்கிச் சாப்பிட, 4 - 6 முறை நீர்ப் பேதியாகி குடலில் தேங்கியிருந்த தேவையற்ற பித்தம் வெளியேறிவிடும். இதன்மூலம் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதி சுத்தமடைவதால், உடல் யந்திரங்களின் மிக முக்கிய யந்திரமான கல்லீரல் பகுதியை நீங்கள் சுத்தமாக்கிக் கொள்ளலாம்.
மனதில் அமைதியுடன் வாழத் தீர்மானித்துவிட்ட நீங்கள், உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக் கூடிய உணவு வகைகளைத் தேர்ந்து எடுத்துச் சாப்பிட்டு வரவும். காலையில் ஓட்ஸ் கஞ்சி அல்லது புழுங்கலரிசிக் கஞ்சி, பசு நெய்யும் சிட்டிகை உப்பும் கலந்து வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். குடித்த கஞ்சி செரித்தவுடன் சூடான புழுங்கலரிச் சாதம், முருங்கைக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துவிட்ட சாம்பார், பசுநெய் கலந்து சாப்பிட்ட பிறகு, மிளகு, சீரகம் சேர்த்த தக்காளி ரசம், அதிலுள்ள கொத்தமல்லியுடன் சாதம் பிசைந்து சாப்பிடவும். ஏடு படிந்த கெட்டித் தயிர்ச்சாதம் அதன் பிறகு சாப்பிடவும். கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லி சட்னியை அதிகம் தொட்டுச் சாப்பிடப் பயன்படுத்தவும். வேக வைத்த புடலங்காய், வெள்ளரிக்காய், மிளகு, சீரகம் , தேங்காய், மிளகாய் சேர்த்த கூட்டு சாப்பிட மிகவும் நல்லது.
மாலை வேளைகளில் ஏதேனும் பழ வகைகள் சாப்பிடவும். கொய்யாப் பழம், ஆப்பிள், திராட்சை, மாதுளம்பழம், அன்னாசி, பப்பாளி, பூவன் வாழைப் பழம், நேந்திரம் பழம், மலை வாழைப் பழம், நெல்லிக்கனி, பேரீச்சம்பழம், சீதாப் பழம் மற்றும் இதர பழ வகைகளை மெனு ஒன்று தயாரித்து மாற்றி மாற்றி சாப்பிட்டு வரவும்.
இரவில் கோதுமை ரவை உப்புமா, கோதுமை சப்பாத்தி, பச்சைப் பயறு வேக வைத்து, சின்ன வெங்காயத்துடன் தயாரிக்கப்பட்ட கூட்டு போன்றவை சாப்பிட உகந்தது. பசி நன்றாக இருந்தால் ஆயுர்வேதத்தின் மிகச் சிறந்த லேகியமாகிய சியவனபிராசத்தை காலை மாலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு வரை நக்கிச் சாப்பிட்டு வரவும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
திருமணமான என் அண்ணனுடன் எனக்குப் பெண் பார்க்கச் சென்றேன். அண்ணனை மாப்பிள்ளை என நினைத்து உபசரிக்கத் தொடங்கிவிட்டார்கள். காரணம், எனக்கு 30 வயதுதான் ஆகிறது என்றாலும், தலைமுடி, மீசையில் நரை எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. இளமையிலேயே முதுமை வரத் தொடங்கிவிட்ட எனக்கு, மறுபடியும் இளமையுடன் அழகாக மாற வழி என்ன?
கனகவேல், தூத்துக்குடி.
இன்றைய வாழ்க்கைமுறையில் இளைஞர்களுக்கு ஓர் ஆண்டில் இரு வயது கூடுகிறது. தான் படித்த கல்விக்கு ஏற்றவாறு வேலை அமையாமற் போனாலோ, தன் கூடப் படித்தவர்கள் தன்னைவிட வாழ்க்கையில் நல்லமுறையில் வேலை கிடைத்துப் பணியில் அமர்ந்துவிட்டாலோ ஏற்படும் மனப் புழுக்கம், முதுமைக்கு விரைவில் வித்திடுகிறது. மனதில் ஏற்படும் இந்த தாபம், உடற்சூட்டை அதிகரித்து தோலைச் சார்ந்த ப்ராஜகம் என்னும் பித்தத்தைச் சூடாக்குகிறது. நெல் விளையும் செடியின் வேர் பதிந்துள்ள நிலத்தில், நீர் குறைந்து உரம் கூடி, வெயிலின் தாக்கமும் அதிகரித்தால், செடி பழுத்து விடுவதைப் போல, மயிர்க்கால்கள் பதிந்துள்ள தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, ப்ராஜக பித்தத்தின் சூடும் கூடும்போது, மயிர்க்கால்களின் வழியாக, நுனிவரை முடி நரைத்து விடுகிறது. ஆக, தேக ஆரோக்கியத்தின் பாதுகாப்பானது மனதிலிருந்து தொடங்குகிறது.
என்றும் இளமையுடன் அழகாக இருக்க விரும்பும் நீங்கள் ஆயுர்வேதம் உபதேசிக்கும் அனுதைலம் எனும் மூக்கில் விட்டுக் கொள்ளும் மருந்தை இரண்டு சொட்டு காலை, இரவு பல் தேய்த்த பிறகு விட்டுக் கொள்ளவும். மூக்கில் விட்டவுடன் தலைப் பகுதியில் சேர்ந்துள்ள தேவையற்ற கபதோஷத்தையும், மேலும் பல அழுக்குகளையும் கரைத்து, வாய்ப் பகுதிக்கு வந்தவுடன் காரி உமிழ்ந்துவிடவும்.
கண்களுக்கு இளநீர் குழம்பு இரண்டு சொட்டு இரவில் படுக்கும் முன் விட்டுக் கொள்வதால், நாள் முழுவதும் கண்ணில் சேர்ந்துள்ள தூசும் மாசும் கண்ணிலிருந்து நீராக வடிவதன் மூலம் வெளியேறிவிடும். இந்த அனுதைலமும், இளநீர்க் குழம்பும் விட்டவுடன் எரிச்சலைத் தந்தாலும், சிறிது நேரத்திற்குப் பிறகு குளிர்ச்சியைத் தருகின்றன. அரிமேதஸ் தைலம், சிறிது வாயிலிட்டு உமிழ்நீர் சுரந்தவுடன் வாயினுள் குலுக்கித் துப்பிவிட, வாயிலுள்ள பகுதி முழுவதும் சுத்தமடைவதன் விளைவாக, உணவைச் செரிமானம் செய்வதற்கான சுரப்பிகளின் வழியாக வரும் திரவங்கள் சுத்தமாகச் சுரக்கின்றன. நீங்கள் உண்ணும் உணவின் சத்தை, உடல் பெறுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் எளிதில் பெறலாம்.
தலைக்கு நீலிபிருங்காதிகேர (தேங்காய் எண்ணெய்) தைலத்தையோ, கய்யுண்யாதி கேர தைலத்தையோ, பஞ்சில் முக்கி தலையில் சுமார் 1 மணி நேரம் ஊறிய பின்பு குளிக்கவும். இதனால், தலைபாரம் சளி ஜலதோஷம் ஏற்படாமலிருக்க, ராஸ்னாதி சூரணத்தைக் குளித்தபிறகு உச்சந்தலையில் தேய்த்துவிடவும்.
நீங்கள் ஆணாக இருப்பதால் திங்கள் - புதன் - சனிக்கிழமைகளில் உடலுக்குப் பலாஅஸ்வகந்தாதி குழம்பு, பிரபஞ்சன விமர்தனம் குழம்பு போன்ற தைலங்களில் ஒன்றை உடலெங்கும் தேய்த்து சுமார் 1 மணி நேரம் வரை ஊறிக் குளிக்கவும்.
இருமாதங்களுக்கு ஒரு முறை அவிபத்தி சூரணத்தை 7 முதல் 10 கிராம் வரை எடுத்து, 12 முதல் 15 மி.லி.வரை தேன் குழைத்து, காலையில் குடித்த கஞ்சி செரித்து பசி எடுத்தவுடன் நக்கிச் சாப்பிட, 4 - 6 முறை நீர்ப் பேதியாகி குடலில் தேங்கியிருந்த தேவையற்ற பித்தம் வெளியேறிவிடும். இதன்மூலம் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதி சுத்தமடைவதால், உடல் யந்திரங்களின் மிக முக்கிய யந்திரமான கல்லீரல் பகுதியை நீங்கள் சுத்தமாக்கிக் கொள்ளலாம்.
மனதில் அமைதியுடன் வாழத் தீர்மானித்துவிட்ட நீங்கள், உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக் கூடிய உணவு வகைகளைத் தேர்ந்து எடுத்துச் சாப்பிட்டு வரவும். காலையில் ஓட்ஸ் கஞ்சி அல்லது புழுங்கலரிசிக் கஞ்சி, பசு நெய்யும் சிட்டிகை உப்பும் கலந்து வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். குடித்த கஞ்சி செரித்தவுடன் சூடான புழுங்கலரிச் சாதம், முருங்கைக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துவிட்ட சாம்பார், பசுநெய் கலந்து சாப்பிட்ட பிறகு, மிளகு, சீரகம் சேர்த்த தக்காளி ரசம், அதிலுள்ள கொத்தமல்லியுடன் சாதம் பிசைந்து சாப்பிடவும். ஏடு படிந்த கெட்டித் தயிர்ச்சாதம் அதன் பிறகு சாப்பிடவும். கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லி சட்னியை அதிகம் தொட்டுச் சாப்பிடப் பயன்படுத்தவும். வேக வைத்த புடலங்காய், வெள்ளரிக்காய், மிளகு, சீரகம் , தேங்காய், மிளகாய் சேர்த்த கூட்டு சாப்பிட மிகவும் நல்லது.
மாலை வேளைகளில் ஏதேனும் பழ வகைகள் சாப்பிடவும். கொய்யாப் பழம், ஆப்பிள், திராட்சை, மாதுளம்பழம், அன்னாசி, பப்பாளி, பூவன் வாழைப் பழம், நேந்திரம் பழம், மலை வாழைப் பழம், நெல்லிக்கனி, பேரீச்சம்பழம், சீதாப் பழம் மற்றும் இதர பழ வகைகளை மெனு ஒன்று தயாரித்து மாற்றி மாற்றி சாப்பிட்டு வரவும்.
இரவில் கோதுமை ரவை உப்புமா, கோதுமை சப்பாத்தி, பச்சைப் பயறு வேக வைத்து, சின்ன வெங்காயத்துடன் தயாரிக்கப்பட்ட கூட்டு போன்றவை சாப்பிட உகந்தது. பசி நன்றாக இருந்தால் ஆயுர்வேதத்தின் மிகச் சிறந்த லேகியமாகிய சியவனபிராசத்தை காலை மாலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு வரை நக்கிச் சாப்பிட்டு வரவும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
Monday, February 8, 2010
முஸ்லிம்கள் மாமிசம் உண்பது ஏன்?
இப்போதெல்லாம் காய்கறி (சைவ) உணவு முறை என்பது ஒரு இயக்கமாகவே ஆகிவிட்டது. பலர் இதனை விலங்கு உரிமையுடன் தொடர்புபடுத்தியும் பார்க்கின்றனர். உண்மையில், பலர் இறைச்சி மற்றும் வேறுவகை அசைவ உணவு என்பது விலங்கு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.
உயிர் வாழும் அனைத்து உயிரிடத்தும் கருணையும் இரக்கமும் காட்ட வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கின்றது. ஆனால் அதே சமயம், அல்லாஹ் இவ்வுலகிலுள்ள அற்புதமான செடி கொடி மற்றும் விலங்கினங்களையும் படைத்ததே மனிதனின் நன்மைக்காகத்தான் என்பதையும் இஸ்லாம் நிலை நிறுத்துகிறது. இவை அல்லாஹ் மனிதனுக்கு அளித்திருக்கும் ஒரு நிஃமத் (அருட்கொடை) மற்றும் ஒரு அமானத் (trust அல்லது ஒருவர் மீது வைக்கும் நன்னம்பிக்கை). ஆகவே, இவற்றை நீதியான நெறிமுறையின் அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது மனிதனைப் பொறுத்தது.
இந்த தர்க்கத்தை பல்வேறு கோணங்களில் இருந்து இப்போது ஆராயலாம்.
1. ஒரு முஸ்லிம் சுத்த காய்கனி (சைவ) உணவு மட்டுமே உண்பவராக இருக்க முடியும்.
2. ஒரு முஸ்லிம் சுத்த காய்கனி (சைவ) உணவு மட்டுமே உண்பவராகவும் அதே சமயம் மிகச் சிறந்த முஸ்லிமாகவும் வாழ முடியும். அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்பது ஒரு முஸ்லிமுக்குக் கட்டாயம் இல்லை.
3. முஸ்லிம்கள், (அவர்கள் ஆசைப்பட்டால் அல்லது அவசியப்பட்டால்) அசைவ உணவு உட்கொள்ள குர்ஆன் அனுமதி அளிக்கிறது. இதற்குக் கீழ் வரும் குர்ஆன் வசனங்கள் ஆதாரமாகும்.
a. இறை நம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் செய்து கொண்ட வாக்குறுதிகளை) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு (குறிப்பாகச்) சொல்லப்பட்டவை தவிர மற்ற அனைத்து நாற்கால் பிராணிகளும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமானவையாக ஆக்கப்பட்டுள்ளன. (குர்ஆன் 5:1)
b. இன்னும் கால்நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்தான். அவற்றிலிருந்து நீங்கள் (அவற்றின் தோல் மூலம் கிடைக்கும் ஆடைகளில் இருந்து) கதகதப்பையும் இன்னும் பலவித பலங்களையும் அடைகிறீர். மேலும் அவற்றை (உங்கள் உணவாக) உண்ணவும் செய்கிறீர்கள். (குர்ஆன் 16:5)
c. இன்னும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. அவற்றின் உடலுக்குள்ளிருந்து சுரக்கும் பாலை நீங்கள் அருந்துகிறீர்கள். இன்னும் அவற்றில் உங்களுக்கு பலவித பயன்கள் உள்ளன. அவற்றின் மாமிசத்தை (உணவாக நீங்கள்) புசிக்கிறீர்கள். (குர்ஆன் 23:21)
4. புலால் உணவு சத்துமிக்கது.
இறைச்சி என்பது புரோட்டீன், இரும்புத் சத்து, விட்டமின் பி1 மற்றும் niacin. அடங்கிய செறிவான உணவு. புரோட்டீனுக்கான சிறந்த ஆதாரம் அசைவ உணவே.
5. மனிதர்களின் பற்கள் மாமிசம் உண்ணும் மிருகங்களைப் போன்றே அமைந்துள்ளன.
இலைதளைகளை உண்டு வாழும் மாடு, ஆடு இவற்றின் பல் அமைப்பை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவற்றுக்கிடையே ஆச்சரியமான ஒரு ஒற்றுமையைக் காண முடியும். இவை அனைத்தும் தட்டையான / சீரான பற்களைக் கொண்டுள்ளன, அதாவது தாவர உணவை உட்கொள்ள வசதியாக. அதே சமயம் மாமிசம் உண்ணும் சிங்கம் அல்லது புலி இவற்றின் பல் அமைப்பைக் கவனித்தால் அவை கூரான பல் அமைப்பைக் கொண்டிருப்பதைக் காணலாம், அதாவது மாமிச உணவை உண்ணுவதற்கு வசதியாக.
ஆனால் மனிதர்களின் பல் அமைப்பை நீங்கள் கவனித்தால் அவை தட்டையாகவும் அதே நேரம் கூராக பற்களையும் கொண்டிருப்பதைக் காணலாம். மாமிசம் மற்றும் தாவர உணவு இரண்டையும் உண்ணுவதற்கு வசதியாக இவை உள்ளன. சர்வ வல்லமை உள்ள இறைவன் மனிதனை தாவர உணவு மட்டுமே உண்ணும் பிறவியாகப் படைக்க விரும்பியிருந்தால், கூரான பற்களையும் வைத்து ஏன் படைக்க வேண்டும்? தர்க்க ரீதியாகப் பார்த்தால், இறைவன் மனிதனை இருவகை உணவையும் உண்ணும் விதமாகவே படைத்தது நிரூபணமாகும்.
6. மனிதனால் தாவரம் மற்றும் மாமிச உணவு இரண்டையுமே ஜீரணிக்க முடியும்.
தாவர உண்ணிகளின் ஜீரண மண்டலம் தாவரத்தை மட்டுமே ஜீரணிக்க முடியும். அது போன்றே, மாமிச உண்ணிகளின் ஜீரண மண்டலம் மாமிசத்தை மட்டுமே ஜீரணிக்க முடியும். ஆனால் மனிதனால் மட்டுமே தாவரம் மற்றும் மாமிசத்தை ஜீரணிக்க முடியும். தாவர உணவை மட்டுமே உண்டு வாழுமாறு மனிதனை இறைவன் படைத்திருந்தால், ஏன் இருவகை உணவையும் ஜீரணிக்குமாறு மனிதனது ஜீரண மண்டலத்டைப் படைக்க வேண்டும்?
7. ஹிந்து வேதங்கள் அசைவ உணவை உண்ண அனுமதிக்கின்றன.
அ. அனேக ஹிந்துக்கள் அசைவ உணவு தங்கள் மதத்திற்கு எதிரானது எனக் கருதி சைவ உணவு மட்டுமே உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் வேதங்கள் அசைவ உணவை அனுமதிக்கின்றன. அவர்களின் ஞானிகளும் முனிவர்களும் அசைவ உணவு உட்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
ஆ. அயோத்தியாக் காண்டத்திலே வசனம் 20, 26 மற்றும் 94 இவற்றில் ராமர் வனவாசம் செல்லும்போது தனது ருசியான அசைவ உணவைத் தியாகம் செய்வதாகத் தனது அன்னையிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் அசைவ உணவை விரும்பி உட்கொண்டதாகத் தெரிகிறது. ராமர் அசைவம் உட்கொள்ளுமிடத்து, மற்ற ஹிந்துக்கள் என் உட்கொள்ளக் கூடாது?
8. ஹிந்து மதம் மற்ற மதங்களின் ஆளுமைக்கு உட்பட்டது.
தங்கள் சொந்த மதத்தில் அசைவம் உண்ண அனுமதி இருந்தும் அனேக ஹிந்துக்கள் மற்ற (ஜைன மதம் போன்ற) மதங்களின் ஆளுமைக்குட்பட்டு சைவ உணவை பின்பற்றுகின்றனர்.
9. தாவரங்களுக்கும் உயிர் உள்ளது.
சில மதங்கள் உயிர்களைக் கொல்லுவதற்கு எதிராக சைவ முறையைப் பின்பற்றுகின்றனர். எந்த உயிரையும் கொல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியும் எனில், அத்தகைய முறையைப் பின்பற்றும் முதல் ஆளாக நானிருப்பேன். ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்ற உண்மை நிரூபிக்கபட்ட பின்னர் உயிர்களைக் கொள்ளாமல் சுத்த சைவமாக வாழ முடியும் என்கிற அவர்களது வாதம் இங்கு தோற்றுவிடுகிறது.
10. தாவரங்களும் வலியை உணர்கின்றன.
அவர்களது இன்னொரு வாதம் என்னவென்றால், தாவரங்கள் வலியை உணர்வதில்லை. ஆனால் அறிவியலோ வேறுவிதமாகக் கூறுகிறது. வித்தியாசம் என்னவென்றால் அவற்றின் நுண்ணிய கதறலை நம்மால் உணர முடியாது, அவ்வளவே. மனிதனால் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை உள்ள சத்ததைக் கேட்க முடியாது. ஆனால் ஒரு நாயால் 40000 ஹெர்ட்ஸ் வரை காதால் கேட்க முடியும். தண்ணீர் கேட்டு அழும் ஒரு தாவரத்தின் குரலை ஒரு நவீன கருவி கொண்டு பதிவு செய்து நிரூபணம் செய்திருக்கிறார் ஒரு விவசாயி.
11. இரண்டு அறிவு குறைவாக உள்ள ஒரு பிராணியைகக் கொல்வது ஒன்றும் குறைவான குற்றமாகாது. தாவரங்கள் இரு அறிவு உள்ளவை என்றும் மிருகங்கள் ஐந்து அறிவு உள்ளவை என்றும் ஒரு சைவப் பிரியர் வாதாடினால், குறைவான அறிவுள்ள ஒரு ஜீவனைக் கொள்வது அவரைப் பொறுத்தவரை சிறிய குற்றம்.
ஒரு உதாரணம்: ஒருவர்க்கு காது கேளாத, வாய் பேசாத ஒரு தம்பி உள்ளார். அவர் சாதாரண மனிதனைவிட இரண்டு அறிவு குறைவானவர். ஒருவன் அவரைக் கொலை செய்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். ஆறறிவுள்ள ஒருவனைவிட குறைவான அறிவுள்ள ஒருவனைக் கொலை செய்தததற்காக குறைவான தண்டனை தருமாறு அவன் வாதாட முடியுமா? (உண்மையில் அவன் ஒரு அப்பிராணியைக் கொலை செய்ததற்காக அதிகமான தண்டனையல்லவா அவனுக்குத் தர வேண்டும்?) ஆனால் இஸ்லாம் இதுபோன்ற வாதத்தை அடிப்படையாகக் கொள்வதில்லை.
மனிதனுக்கு எவ்வகை மாமிசம் அனுமதிக்கப்பட்டுள்ளது மற்றும் எவ்வகை மாமிசம் உண்ண அனுமதியில்லை என்பதை குர்-ஆன் கூறுகிறது.
“அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளது (என்னவென்றால்) தானாக இறந்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும் மற்றும் அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கபட்டவையும். ஆனால் எவரேனும், பாவம் செய்யாத நிலையில் வரம்பு மீறாமல், நிர்பந்தத்தின் பேரில் இவற்றை உண்ண நேர்ந்தால், அவர் மீது குற்றமில்லை. அல்லாஹ் கருணை மிக்கோன், மிக மன்னிப்பவன். (குர்-ஆன் 2:173)
குர்-ஆன் கூறுகிறது: மனிதர்களே, பூமியில் அனுமதிக்கபட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். (குர்-ஆன் 2:168)
உயிர் வாழும் அனைத்து உயிரிடத்தும் கருணையும் இரக்கமும் காட்ட வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கின்றது. ஆனால் அதே சமயம், அல்லாஹ் இவ்வுலகிலுள்ள அற்புதமான செடி கொடி மற்றும் விலங்கினங்களையும் படைத்ததே மனிதனின் நன்மைக்காகத்தான் என்பதையும் இஸ்லாம் நிலை நிறுத்துகிறது. இவை அல்லாஹ் மனிதனுக்கு அளித்திருக்கும் ஒரு நிஃமத் (அருட்கொடை) மற்றும் ஒரு அமானத் (trust அல்லது ஒருவர் மீது வைக்கும் நன்னம்பிக்கை). ஆகவே, இவற்றை நீதியான நெறிமுறையின் அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது மனிதனைப் பொறுத்தது.
இந்த தர்க்கத்தை பல்வேறு கோணங்களில் இருந்து இப்போது ஆராயலாம்.
1. ஒரு முஸ்லிம் சுத்த காய்கனி (சைவ) உணவு மட்டுமே உண்பவராக இருக்க முடியும்.
2. ஒரு முஸ்லிம் சுத்த காய்கனி (சைவ) உணவு மட்டுமே உண்பவராகவும் அதே சமயம் மிகச் சிறந்த முஸ்லிமாகவும் வாழ முடியும். அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்பது ஒரு முஸ்லிமுக்குக் கட்டாயம் இல்லை.
3. முஸ்லிம்கள், (அவர்கள் ஆசைப்பட்டால் அல்லது அவசியப்பட்டால்) அசைவ உணவு உட்கொள்ள குர்ஆன் அனுமதி அளிக்கிறது. இதற்குக் கீழ் வரும் குர்ஆன் வசனங்கள் ஆதாரமாகும்.
a. இறை நம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் செய்து கொண்ட வாக்குறுதிகளை) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு (குறிப்பாகச்) சொல்லப்பட்டவை தவிர மற்ற அனைத்து நாற்கால் பிராணிகளும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமானவையாக ஆக்கப்பட்டுள்ளன. (குர்ஆன் 5:1)
b. இன்னும் கால்நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்தான். அவற்றிலிருந்து நீங்கள் (அவற்றின் தோல் மூலம் கிடைக்கும் ஆடைகளில் இருந்து) கதகதப்பையும் இன்னும் பலவித பலங்களையும் அடைகிறீர். மேலும் அவற்றை (உங்கள் உணவாக) உண்ணவும் செய்கிறீர்கள். (குர்ஆன் 16:5)
c. இன்னும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. அவற்றின் உடலுக்குள்ளிருந்து சுரக்கும் பாலை நீங்கள் அருந்துகிறீர்கள். இன்னும் அவற்றில் உங்களுக்கு பலவித பயன்கள் உள்ளன. அவற்றின் மாமிசத்தை (உணவாக நீங்கள்) புசிக்கிறீர்கள். (குர்ஆன் 23:21)
4. புலால் உணவு சத்துமிக்கது.
இறைச்சி என்பது புரோட்டீன், இரும்புத் சத்து, விட்டமின் பி1 மற்றும் niacin. அடங்கிய செறிவான உணவு. புரோட்டீனுக்கான சிறந்த ஆதாரம் அசைவ உணவே.
5. மனிதர்களின் பற்கள் மாமிசம் உண்ணும் மிருகங்களைப் போன்றே அமைந்துள்ளன.
இலைதளைகளை உண்டு வாழும் மாடு, ஆடு இவற்றின் பல் அமைப்பை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவற்றுக்கிடையே ஆச்சரியமான ஒரு ஒற்றுமையைக் காண முடியும். இவை அனைத்தும் தட்டையான / சீரான பற்களைக் கொண்டுள்ளன, அதாவது தாவர உணவை உட்கொள்ள வசதியாக. அதே சமயம் மாமிசம் உண்ணும் சிங்கம் அல்லது புலி இவற்றின் பல் அமைப்பைக் கவனித்தால் அவை கூரான பல் அமைப்பைக் கொண்டிருப்பதைக் காணலாம், அதாவது மாமிச உணவை உண்ணுவதற்கு வசதியாக.
ஆனால் மனிதர்களின் பல் அமைப்பை நீங்கள் கவனித்தால் அவை தட்டையாகவும் அதே நேரம் கூராக பற்களையும் கொண்டிருப்பதைக் காணலாம். மாமிசம் மற்றும் தாவர உணவு இரண்டையும் உண்ணுவதற்கு வசதியாக இவை உள்ளன. சர்வ வல்லமை உள்ள இறைவன் மனிதனை தாவர உணவு மட்டுமே உண்ணும் பிறவியாகப் படைக்க விரும்பியிருந்தால், கூரான பற்களையும் வைத்து ஏன் படைக்க வேண்டும்? தர்க்க ரீதியாகப் பார்த்தால், இறைவன் மனிதனை இருவகை உணவையும் உண்ணும் விதமாகவே படைத்தது நிரூபணமாகும்.
6. மனிதனால் தாவரம் மற்றும் மாமிச உணவு இரண்டையுமே ஜீரணிக்க முடியும்.
தாவர உண்ணிகளின் ஜீரண மண்டலம் தாவரத்தை மட்டுமே ஜீரணிக்க முடியும். அது போன்றே, மாமிச உண்ணிகளின் ஜீரண மண்டலம் மாமிசத்தை மட்டுமே ஜீரணிக்க முடியும். ஆனால் மனிதனால் மட்டுமே தாவரம் மற்றும் மாமிசத்தை ஜீரணிக்க முடியும். தாவர உணவை மட்டுமே உண்டு வாழுமாறு மனிதனை இறைவன் படைத்திருந்தால், ஏன் இருவகை உணவையும் ஜீரணிக்குமாறு மனிதனது ஜீரண மண்டலத்டைப் படைக்க வேண்டும்?
7. ஹிந்து வேதங்கள் அசைவ உணவை உண்ண அனுமதிக்கின்றன.
அ. அனேக ஹிந்துக்கள் அசைவ உணவு தங்கள் மதத்திற்கு எதிரானது எனக் கருதி சைவ உணவு மட்டுமே உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் வேதங்கள் அசைவ உணவை அனுமதிக்கின்றன. அவர்களின் ஞானிகளும் முனிவர்களும் அசைவ உணவு உட்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
ஆ. அயோத்தியாக் காண்டத்திலே வசனம் 20, 26 மற்றும் 94 இவற்றில் ராமர் வனவாசம் செல்லும்போது தனது ருசியான அசைவ உணவைத் தியாகம் செய்வதாகத் தனது அன்னையிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் அசைவ உணவை விரும்பி உட்கொண்டதாகத் தெரிகிறது. ராமர் அசைவம் உட்கொள்ளுமிடத்து, மற்ற ஹிந்துக்கள் என் உட்கொள்ளக் கூடாது?
8. ஹிந்து மதம் மற்ற மதங்களின் ஆளுமைக்கு உட்பட்டது.
தங்கள் சொந்த மதத்தில் அசைவம் உண்ண அனுமதி இருந்தும் அனேக ஹிந்துக்கள் மற்ற (ஜைன மதம் போன்ற) மதங்களின் ஆளுமைக்குட்பட்டு சைவ உணவை பின்பற்றுகின்றனர்.
9. தாவரங்களுக்கும் உயிர் உள்ளது.
சில மதங்கள் உயிர்களைக் கொல்லுவதற்கு எதிராக சைவ முறையைப் பின்பற்றுகின்றனர். எந்த உயிரையும் கொல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியும் எனில், அத்தகைய முறையைப் பின்பற்றும் முதல் ஆளாக நானிருப்பேன். ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்ற உண்மை நிரூபிக்கபட்ட பின்னர் உயிர்களைக் கொள்ளாமல் சுத்த சைவமாக வாழ முடியும் என்கிற அவர்களது வாதம் இங்கு தோற்றுவிடுகிறது.
10. தாவரங்களும் வலியை உணர்கின்றன.
அவர்களது இன்னொரு வாதம் என்னவென்றால், தாவரங்கள் வலியை உணர்வதில்லை. ஆனால் அறிவியலோ வேறுவிதமாகக் கூறுகிறது. வித்தியாசம் என்னவென்றால் அவற்றின் நுண்ணிய கதறலை நம்மால் உணர முடியாது, அவ்வளவே. மனிதனால் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை உள்ள சத்ததைக் கேட்க முடியாது. ஆனால் ஒரு நாயால் 40000 ஹெர்ட்ஸ் வரை காதால் கேட்க முடியும். தண்ணீர் கேட்டு அழும் ஒரு தாவரத்தின் குரலை ஒரு நவீன கருவி கொண்டு பதிவு செய்து நிரூபணம் செய்திருக்கிறார் ஒரு விவசாயி.
11. இரண்டு அறிவு குறைவாக உள்ள ஒரு பிராணியைகக் கொல்வது ஒன்றும் குறைவான குற்றமாகாது. தாவரங்கள் இரு அறிவு உள்ளவை என்றும் மிருகங்கள் ஐந்து அறிவு உள்ளவை என்றும் ஒரு சைவப் பிரியர் வாதாடினால், குறைவான அறிவுள்ள ஒரு ஜீவனைக் கொள்வது அவரைப் பொறுத்தவரை சிறிய குற்றம்.
ஒரு உதாரணம்: ஒருவர்க்கு காது கேளாத, வாய் பேசாத ஒரு தம்பி உள்ளார். அவர் சாதாரண மனிதனைவிட இரண்டு அறிவு குறைவானவர். ஒருவன் அவரைக் கொலை செய்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். ஆறறிவுள்ள ஒருவனைவிட குறைவான அறிவுள்ள ஒருவனைக் கொலை செய்தததற்காக குறைவான தண்டனை தருமாறு அவன் வாதாட முடியுமா? (உண்மையில் அவன் ஒரு அப்பிராணியைக் கொலை செய்ததற்காக அதிகமான தண்டனையல்லவா அவனுக்குத் தர வேண்டும்?) ஆனால் இஸ்லாம் இதுபோன்ற வாதத்தை அடிப்படையாகக் கொள்வதில்லை.
மனிதனுக்கு எவ்வகை மாமிசம் அனுமதிக்கப்பட்டுள்ளது மற்றும் எவ்வகை மாமிசம் உண்ண அனுமதியில்லை என்பதை குர்-ஆன் கூறுகிறது.
“அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளது (என்னவென்றால்) தானாக இறந்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும் மற்றும் அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கபட்டவையும். ஆனால் எவரேனும், பாவம் செய்யாத நிலையில் வரம்பு மீறாமல், நிர்பந்தத்தின் பேரில் இவற்றை உண்ண நேர்ந்தால், அவர் மீது குற்றமில்லை. அல்லாஹ் கருணை மிக்கோன், மிக மன்னிப்பவன். (குர்-ஆன் 2:173)
குர்-ஆன் கூறுகிறது: மனிதர்களே, பூமியில் அனுமதிக்கபட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். (குர்-ஆன் 2:168)
Subscribe to:
Posts (Atom)